For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

16 வயது மாணவிக்கு தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்ட சக மாணவன்..!! பள்ளி வளாகத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

A class 12 student in Thokaimalai Government High School created a stir after he tied a thali to a fellow student he was in love with.
03:49 PM Jul 02, 2024 IST | Chella
16 வயது மாணவிக்கு தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்ட சக மாணவன்     பள்ளி வளாகத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்
Advertisement

தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் காதலித்த சக மாணவிக்கு தாலி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூரை சேர்ந்த 16 வயது சிறுமி, தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் படித்து வருகிறார். அதே பள்ளியில் மனச்சனம்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுவனும் மாணவி படிக்கும் அதே வகுப்பில் பிளஸ்2 பயின்று வருகிறார். மாணவனும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் 27ஆம் தேதி மாணவன் காதலித்த சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே தாலி கட்டியுள்ளார்.

மேலும், தாலி கட்டியதை வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இருவரும் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பெண்ணின் உறவினர்கள் சிறுவனிடம் கேட்டபோது இருதரப்பினரிடைய மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவே சிறுமி, சிறுவனுடன் மாயமாகியுள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், தோகைமலை போலீசார் மாயமாகிய சிறுவன், சிறுமியர் இருவரையும் இன்று கண்டுபிடித்துள்ளனர். மேலும், சிறுவனை குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று பள்ளி திறந்ததும் சிறுமியின் உறவினர்கள் பள்ளி வளாகத்தில் வைத்து மாணவன், மாணவிக்கு தாலி கட்டி உள்ளதாகவும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை சரியான முறையில் வழி நடத்தாமல் என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மாற்று சான்றிதழ் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு வழங்க வேண்டும் எனவும், ஆண் பெண் இருபாலருக்கும் ஒரே பள்ளி அமைந்துள்ளதால் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இது போன்ற சம்பவங்கள் பள்ளியில் நடைபெறாமல் இருப்பதற்கு ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More : உங்களுக்கு இன்னும் ரூ.1,000 வரவில்லையா..? விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதா..? உடனே இதை பண்ணுங்க..!!

Tags :
Advertisement