For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செல்பி எடுக்க வந்த ரசிகர்.. ஆவேசமான சீமான்! நடந்தது என்ன?

04:19 PM Apr 08, 2024 IST | Mari Thangam
செல்பி எடுக்க வந்த ரசிகர்   ஆவேசமான சீமான்  நடந்தது என்ன
Advertisement

பிரச்சார மேடையில் சீமான் பாடிக்கொண்டிருந்த போது இளைஞர் செய்த செயலால் கோவமடைந்த சீமானின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிருஷ்ணகிரி வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், “ ஜனநாயகத்தை ஒழுங்கமைக்க வேண்டுமானால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டுகளுக்கு போட்டியிடாமல் தடை விதிக்க வேண்டும். தற்போது ரூ.4 கோடி சிக்கியது தொடர்பாக அண்ணாமலை பதில் அளிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறியவர் அண்ணாமலை" என்று பேசினார்.

அதனைத்தொடர்ந்து, வித்யா வீரப்பனை ஆதரித்து பாட்டு பாடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சீமானை போல் சட்டை போட்ட இளைஞன் மேடையில் ஏறி அவருடன் செல்பி எடுக்க முயன்றார். இதனால் கோபமடைந்த சீமான் "முட்டாபய.. கிறுக்குபய.. அவன் பிரச்சனை அவனுக்கு.. போட்டோ எடுக்க பார்க்குறான்" என்று கடுமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags :
Advertisement