For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காலையிலே சோகம்...! லாரி மீது மோதிய கார்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி...!

06:50 AM Apr 27, 2024 IST | Vignesh
காலையிலே சோகம்     லாரி மீது மோதிய கார்    ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
Advertisement

ராஜஸ்தான் மாநிலம் அனுப்கரில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒரு பெண் காயமடைந்தார். உயிரிழந்தவர்களில் 4 பெண்களும் அடங்குவர். இறந்தவர்கள் பயணித்த கார், டிரக்கின் பின்பகுதியில் மோதியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கார் ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Advertisement

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 4 பெண்கள் அடங்குவர். இந்த விபத்து வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அனுப்கர் மாவட்டத்தில் கார் ஒன்று டிரக்கின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். ராய்சிங் நகரில் இருந்து சடங்குக்காக காரில் ஏழு பேர் பயணம் செய்த போது இந்த சோகம் ஏற்பட்டது. 7 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

விபத்தில் சிக்கிய அனைவரும் ஸ்ரீகங்காநகர் மாவட்டம் கிகர்வாலி கிராமத்தில் வசிப்பவர்கள். விபத்தை தொடர்ந்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார். அவரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, மேலும் உயிர் பிழைத்த ஒரு பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

Advertisement