Breaking: சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...!
09:42 AM May 27, 2024 IST
|
Vignesh
Tags :
Advertisement
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
சென்னை விமான நிலையத்துக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து விமான நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்த நிலையில், வெடி குண்டு புரளியை கிளப்பிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் இருந்து, விமானங்களில் பயணிக்க வரும் அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து, சோதனைகள் நடத்தி வருகின்றனர். மேலும் விமானத்தில் ஏற்ற வருகின்ற பயணிகளின் உடைமைகள், பார்சல்கள் அனைத்தும் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன.
Advertisement
Next Article