For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நெஞ்சே பதறுது.. 3 ஆம் வகுப்பு சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 5 ஆம் வகுப்பு மாணவர்கள்..!! ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை..

A 9-year-old student was gang-raped by senior boys in a government school, the school administration sent him home naked and bloody
01:03 PM Oct 23, 2024 IST | Mari Thangam
நெஞ்சே பதறுது   3 ஆம் வகுப்பு சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 5 ஆம் வகுப்பு மாணவர்கள்     ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை
Advertisement

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் கிராமப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இயங்கும் அரசுப் பள்ளியில் மிகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சனிக்கிழமையன்று, மூன்றாம் வகுப்பில் படிக்கும் 9 வயது மாணவியை அதே பள்ளியின் எட்டாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த மூன்று மாணவிகளால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார்.

Advertisement

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி ரத்தப்போக்கூடன் நிர்வாணமாக வீட்டிற்கு வந்துள்ளார். சிறுமியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளியில் நடந்ததை கூற, பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இது குறுத்து பள்ளி நிர்வாகம் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், 'எங்கள் குழந்தை ஜெய்பூரில் இயங்கும் அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமையன்று, பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் விளையாடுவதாக கூறி பள்ளியின் அறைக்கு அழைத்துச் சென்று அங்கு அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த மாணவர்களில் ஒருவன் 5 ஆம் வகுப்பும், மற்றொரு மாணவன் 8 ஆம் வகுப்பும் படித்து வருகிறான்.

குழந்தை சத்தம் போட்டாலும் பள்ளி நிர்வாகத்தினர் யாரும் அங்கு வரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியையிடம் புகார் அளித்தும், பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நிலையில் குழந்தையை நிர்வாண கோளத்தில் தனியாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் என தனது புகாரில் தெரிவித்தார். புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Read more ; உறவினர் ஒப்புதல் இன்றி உடல் உறுப்புகள் தானம்..!! – சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு ஆலோசனை

Tags :
Advertisement