முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வலியால் கதறி துடித்த 5 வயது சிறுமி..!! ஓவிய ஆசிரியரால் தீவிர சிகிச்சை..!! பள்ளியில் வைத்து பலாத்காரம்..!!

The girl also told her mother that her private part was painful. Shocked to hear this, the mother took him to a nearby hospital.
10:32 AM Aug 14, 2024 IST | Chella
Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு தம்பதியினருக்கு 5 வயதில் மகள் இருக்கிறார். இவர், வீட்டின் அருகே இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் யுகேஜி படித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் சோர்வாக இருப்பதை கண்டு அவரது தாய் விசாரித்துள்ளார். அப்போது, சிறுமி கூறிய பதிலை கேட்டு தாய் அதிர்ந்துபோனார்.

Advertisement

அதாவது, சிறுமியின் பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர் அந்த சிறுமியை தனியாக அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி தனது தாயிடம் அந்தரங்கப் பகுதி வலிப்பதாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இச்சம்பவம் பற்றி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி ஓவிய ஆசிரியரை கைது செய்தனர். மேலும், காவல்துறையினர் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More :பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு..!! டைம் நோட் பண்ணிக்கோங்க..!! வெளியான முக்கிய தகவல்..!!

Tags :
5 வயது சிறுமிஓவிய ஆசிரியர்கன்னியாகுமரிபாலியல் வன்கொடுமை
Advertisement
Next Article