For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

10 மாத பிஞ்சு குழந்தையை பலாத்காரம் செய்த 30 வயது இளைஞன்..!! பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை..!!

He took the child who was playing in the yard of the house far away from the house and raped him.
02:43 PM Sep 25, 2024 IST | Chella
10 மாத பிஞ்சு குழந்தையை பலாத்காரம் செய்த 30 வயது இளைஞன்     பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை
Advertisement

குஜராத் மாநிலம் பனோலி கிராமத்தில் கடந்த செப்.22ஆம் தேதி 10 மாத பெண் குழந்தையை தூக்கிச் சென்ற 30 வயது இளைஞன் பலாத்காரம் செய்துள்ளார். தீபக் குமார் லால்பாபு சிங் என அடையாளம் காணப்பட்ட இளைஞன், பனோலி கிராமத்தில் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு குஷால் ஓசா கூறியுள்ளார். உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த குழந்தையின் தாயாரையும், அவரது குடும்பத்தினருக்கும் தீபக் குமார் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்.

Advertisement

குழந்தையுடன் விளையாடுவதற்காக அவர்களது வீட்டிற்கு தீபக் குமார் அடிக்கடி வருவாராம். அப்படித்தான், கடந்த ஞாயிற்றுக்கிழமையும் வந்திருக்கிறார். வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை வீட்டிற்கு வெகு தொலைவில் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்திருக்கிறார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிச் சென்று பார்த்த பாட்டி, குழந்தையின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கசிவதையும், குழந்தை பலத்த காயம் அடைந்திருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

பின்னர், அப்பகுதி மக்கள், தீபக் குமாரைப் பிடித்து சரமாரியாக தாக்கி, போலீசிடம் ஒப்படைத்தனர். இந்த குழப்பமான செய்தியைக் கேட்டு சம்பவ இடத்திற்கு பதறியடித்துக் கொண்டு விரைந்த குழந்தையின் தாய், குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் பலத்த காயங்கள் காரணமாக குழந்தையின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாக கூறி, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, தீபக் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : மாணவர்களுக்கு செம குட் நியூஸ்..!! காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

Tags :
Advertisement