For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குடிபோதையில் 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 22 வயது இளைஞர்..!! எடப்பாடியில் அதிர்ச்சி சம்பவம்..!!

When he went to Valliammal's house, he forced and raped her there. Then he made a noise and attacked him severely.
05:15 PM Sep 20, 2024 IST | Chella
குடிபோதையில் 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 22 வயது இளைஞர்     எடப்பாடியில் அதிர்ச்சி சம்பவம்
Advertisement

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த ஆலச்சம்பாளையம் காளிக்கவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரங்ககவுண்டர். இவரது மனைவி வள்ளியம்மா (80). இவர்களுக்கு 4 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூதாட்டி வள்ளியம்மாளின் கணவர் இறந்துவிட்ட நிலையில், தனக்கு சொந்தமான வீட்டில் அவர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். வழக்கம் போல் இரவு சாப்பிட்டுவிட்டு படுக்க சென்ற நிலையில், அவர் வீட்டு முன் அறையில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

Advertisement

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் எடப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வள்ளியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை நடந்த நேரத்தில் வள்ளியம்மாளின் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது கொலை செய்யப்பட்ட வள்ளியம்மாள் பேத்தியின் கணவர் விக்னேஷ் (22) குடிபோதையில் வள்ளியம்மாளின் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரிக்கையில், பல அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. விசாரணையில், மது போதையில் இருந்த விக்னேஷ், வள்ளியம்மாள் வீட்டிற்கு சென்றதும், அங்கு அவரை கட்டாயப்படுத்தி, பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அவர், சத்தம் போட்டதால், கடுமையாக தாக்கியுள்ளார். இதில், மூதாட்டி வள்ளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், விக்னேஷை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ’அந்த பொண்ணுக்கு சொகுசா இருக்கணும்னு ஆசை’..!! குற்றத்தை நிரூபித்தால் ஜானியை விட்டு விலக தயார்..!!

Tags :
Advertisement