For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எக்ஸ்ரே எடுக்கச் சென்ற 15 வயது சிறுமி..!! லேப் டெக்னீஷியன் செய்த மோசமான காரியம்..!! அலறியடித்து ஓட்டம்..!!

04:14 PM Nov 11, 2023 IST | 1newsnationuser6
எக்ஸ்ரே எடுக்கச் சென்ற 15 வயது சிறுமி     லேப் டெக்னீஷியன் செய்த மோசமான காரியம்     அலறியடித்து ஓட்டம்
Advertisement

எக்ஸ்ரே எடுக்கச் சென்ற 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லேப் டெக்னீஷியனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் முலுண்ட் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பல்வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பரிசோதனை மையத்திற்கு எக்ஸ்ரே எடுப்பதற்காக சிறுமி தனது பெற்றோருடன் சென்றுள்ளார். அங்கு லேப் டெக்னீஷியனாக வேலை செய்த சூரஜ் ஷிண்டே என்பவர் தனி அறையில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

அத்துடன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பரிசோதனை மையத்தில் தன்னை லேப் டெக்னீஷியன் பலாத்காரம் செய்த விஷயத்தை பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த சூரஜ் ஷிண்டேவை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை நவ.13ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags :
Advertisement