முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"உன்னை நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.." -  10 வயது சிறுவனுக்கு உதவ முன்வரும் ஆனந்த் மஹிந்திரா!

07:14 PM May 06, 2024 IST | Mari Thangam
Advertisement

10 வயது சிறுவன் ஒருவனின் நம்பிக்கை தோய்ந்த வார்த்தைகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

டெல்லியின் கிழக்கு விகார் காவல் நிலையம் அருகே சாலையோரத்தில் செயல்பட்டு வரும் ரொட்டி கடை ஒன்றில், பத்து வயது மட்டுமே நிரம்பிய ஜஸ்ப்ரீத் என்ற சிறுவனின் கதை நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். சரப்ஜித் சிங் என்ற உணவு ரிவ்யூ செய்யும் நபர் இந்த கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது கடையில் இருந்த ஜஸ்ப்ரீத்திடம் தந்தை எங்கு சென்றிருக்கிறார் என அவர் வினவ, அதற்கு பதில் அளித்த சிறுவன், சமீபத்தில் தனது தந்தை உயிரிழந்து விட்டார் என்கிறான். இதனால் தனது தாய் மற்றும் 14 வயது அக்காவை காப்பாற்றுவதற்காக அந்த கடையை தானே ஏற்று நடத்துவதாக ஜஸ்ப்ரீத் தெரிவித்துள்ளார்.

அவர் பேசும்போது, ”என் தந்தையிடம் இருந்து எக் ரோல் மற்றும் சிக்கன் ரோல் ரொட்டி வகைகளை செய்ய பழகி இருந்தேன். சமீபத்தில் எனது தந்தை மறைந்து விட்டார். அதன் பின்னர் நானே கடையை நடத்தத் துவங்கி விட்டேன். பல்வேறு வகையான ரொட்டி வகைகளை செய்து விற்பனை செய்கிறேன். வருபவர்கள் எல்லோருமே நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர்” என்று மழலைக் குரல் மாறாமல் சொல்கிறார். இதைச் சொல்லும் போது அவர் முகத்தில் தவழும் அந்த குழந்தைத்தனம் வாய்ந்த புன்னகை நம்மை கலங்க வைக்கிறது.

இது எல்லாம் செய்ய உனக்கு தைரியம் எங்கிருந்து வருகிறது என கேட்டால், சிரித்தபடியே உறுதியான வார்த்தைகளால், ”நான் குரு கோபிந்த் சிங்கின் மகன். என் உடலில் வலு இருக்கும் வரை முயற்சித்துக் கொண்டே இருப்பேன்” என்று உறுதிப்பட தெரிவிக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, சுமார் 96 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது. 27,000க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவிற்கு பாராட்டு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளனர். இதில் பாஜக தலைவர் தாஜீந்தர் பாகா, ’உன்னை நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். உதவவும் தயாராக இருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

மேலும், வாழ்க்கையை நோக்கிய அவரது உறுதியாலும், நெகிழ்ச்சியாலும் ஈர்க்கப்பட்ட ஆனந்த் மஹிந்திரா தனது ஆதரவை வழங்க முன்வந்தார். சிறுவனின் தொடர்புத் தகவலைப் பெறுவதற்காக அவர் அணுகினார், மேலும் அவனது கல்விக்கு உதவுவதற்கு தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.

“தைரியம், உன் பெயர் ஜஸ்பிரீத். ஆனால் அவரது கல்வி பாதிக்கப்படக்கூடாது. அவர் டெல்லி திலக் நகரில் இருக்கிறார் என்று நம்புகிறேன். யாரேனும் அவரது தொடர்பு எண்ணை அணுகினால், தயவுசெய்து அதைப் பகிரவும், ”என்று அவர் எழுதினார், மேலும் ஜஸ்ப்ரீத்தின் கல்விக்கு ஆதரவளிப்பதற்கான வாய்ப்புகளை அவரது அறக்கட்டளை ஆராயும் என்றும் அவர் எழுதினார்.

Tags :
#Delhiself-confidence speech
Advertisement
Next Article