For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"கார்ல போலாமா பாப்பா."?கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமி.! 52 வயது நபரின் வெறி செயல்.!

06:10 AM Dec 22, 2023 IST | 1newsnationuser4
 கார்ல போலாமா பாப்பா   கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமி   52 வயது நபரின் வெறி செயல்
Advertisement

தலைநகர் டெல்லியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் 52 வயது நபரை கைது செய்துள்ளனர்.

Advertisement

டெல்லியின் கால்வாய் பகுதி ஒன்றில் ஒன்பது வயது சிறுமியின் உடல் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிரமான விசாரணையில் இறங்கினார்.

அப்போது சிறுமி வசிக்கும் வீட்டின் உரிமையாளர் அந்த ஒன்பது வயது சிறுமியை காரில் கடத்திச் செல்லும் காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகி இருந்தன. இதனைத் தொடர்ந்து அந்த நபரை கைது செய்து விசாரித்ததில் சிறுமியை காரில் சுற்றிக் காட்டுவதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதை ஒப்புக்கொண்டார். மேலும் அப்பகுதியில் உள்ள ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பின் அவரது கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை கால்வாயில் வீசியதாகவும் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement