For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

8 வயது சிறுமி மாயம்! கூட்டு பலாத்காரம் செய்த 6ம் வகுப்பு மாணவர்கள்... அதிர்ச்சி தகவல்.....

08:31 AM Jul 12, 2024 IST | Shyamala
8 வயது சிறுமி மாயம்  கூட்டு பலாத்காரம் செய்த 6ம் வகுப்பு மாணவர்கள்    அதிர்ச்சி தகவல்
Advertisement

ஆந்திராவில் 8 வயது பள்ளி மாணவி 3 சிறுவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் 8 வயது பள்ளி சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிமை அன்று பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தார். அந்த  சிறுமி வீடு திரும்பாததால்,  பெற்றோர்  உறவினர்கள் வீடுகளில் தேடியும்  கிடைக்காததால் சிறுமியின் தந்தை முச்சுமாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisement

புகாரை அடுத்து சிறுமியை பல இடங்களில் தேடி கிடைக்காததால் போலீசார் மோப்ப நாயை வரவழைத்தனர். அந்த மோப்ப நாய் அப்பகுதியை சேர்ந்த  6 மற்றும் 7 வகுப்பு படிக்கும் 12, 13 வயதுடைய மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றது.

இதையடுத்து போலீசார் அம்மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது.

இதில், பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை முச்சுமரி அணைக்கு அருகே ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்ற சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பிறகு, இதுகுறித்து சிறுமி வெளியே சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில் சிறுமியை கொலை செய்து உடலை பாசன

கால்வாயில் வீசியதாகவும் கைதான சிறுவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

read more... Manjolai | ஹேப்பி நியூஸ் மாஞ்சோலை மக்களே.. குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம்!! – பிபிடிசி அறிவிப்பு

Advertisement