முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சிறப்பு காவலர்களாக பணிபுரியும் முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.7,900 தொகுப்பூதியம்...!

7,900 bonus for ex-servicemen working as special constables
06:18 AM Sep 22, 2024 IST | Vignesh
Advertisement

கோவில் பாதுகாப்பு பணிக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கோவில் பாதுகாப்பு பணிக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்பொழுது கோவில் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக பணிபுரியும் முன்னாள் படைவீரர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.7,900 வழங்கப்பட்டு வருகிறது. கோவில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய வயது வரம்பு 53 முதல் 62 வரை ஆகும்.

Advertisement

தற்போது சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட கீழ்க்காணும் பிரிவுகளில் உள்ள திருக்கோவில்களில் சுமார் 37 கோவில் பாதுகாவல் பணி காலியிடங்கள் உள்ளது. சேலம் டவுனில் 9 கோயில்களிலும், செவ்வாய்பேட்டைப் பகுதியில் 11 கோயில்களிலும், அன்னதானப்பட்டியில் 3 கோயில்களிலும், அஸ்தம்பட்டி, பள்ளப்பட்டி, கொண்டலாம்பட்டி மற்றும் ஆட்டையாம்பட்டி பகுதிகளில் முறையே ஒரு கோயிலிலும், சூரமங்கலம், சேலம் உருக்காலை மற்றும் காரிப்பட்டிப் பகுதிகளில் முறையே 2 கோயில்களிலும் கோவில் பாதுகாப்பு பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆகவே இக்கோயில்களில் பாதுகாப்பு பணிபுரிய விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரில் அணுகி, கோயில்களின் பட்டியலினைச் சரிபார்த்து தங்கள் விருப்பத்தினைத் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags :
Job notificationjobsSalemtn governmentதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article