For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களின் பிணத்திற்கு கூட பாதுகாப்பு இல்லையா.? கற்பழிக்கப்பட்ட 79 வயது மூதாட்டியின் சடலம்.!!

11:56 AM Dec 02, 2023 IST | 1newsnationuser4
பெண்களின் பிணத்திற்கு கூட பாதுகாப்பு இல்லையா   கற்பழிக்கப்பட்ட 79 வயது மூதாட்டியின் சடலம்
Advertisement

பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 79 வயது மூதாட்டி இன் சடலம் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் 46 வயது பிணவரை காவலாளி கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சக ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.

Advertisement

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் அமைந்துள்ள பேனர் பல்கலைக்கழக மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வருபவர் ரேண்டல் பேர்ட். 46 வயதான இவர் மருத்துவமனைக்கு வரும் பிணங்களை பிணவறையின் ஃப்ரீசரில் வைத்து பாதுகாக்கும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று 79 வயது மூதாட்டி ஒருவரின் பிணம் வந்தது.

அந்தப் பிணத்தை ஃப்ரீசரில் வைத்து விட்டு வரும்போது ரேண்டலின் நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பதை உணர்ந்த சக ஊழியர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரேண்டலிடம் விசாரணை செய்ததில் இறந்த பெண்மணி வைக்கப்பட்டிருந்த சவப்பை அதுவாகவே கிழிந்ததாக தெரிவித்திருந்தார்.

எனினும் அவரது நடவடிக்கைகள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. இதனைத் தொடர்ந்து டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்த்ததில் ரேண்டல் அந்த மூதாட்டியின் பிணத்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

Tags :
Advertisement