முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

18 பசுக்கள் மீது ஆசிட் வீசி தாக்குதல்.! 76 வயது மூதாட்டியிடம் காவல்துறை விசாரணை.! அதிர்ச்சி சம்பவம்.!

02:08 PM Dec 13, 2023 IST | 1newsnationuser4
Advertisement

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 18 பசு மாடுகள் மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 76 வயது மூதாட்டியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

கர்நாடக மாநிலம் பெங்களூரு வழி அடுத்த நெடுமங்களா பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் கிரேஸ்(76). இவருக்கு சொந்தமான காலி நிலத்தில் அருகில் உள்ள பசுமாடுகள் மேய்ச்சலுக்கு வந்திருக்கின்றன. இந்நிலையில் பசுக்களின் மீது காயம் இருப்பதை கண்ட உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

இது தொடர்பாக பசுக்களின் உரிமையாளர்கள் ஜோசப் கிரேஸியிடம் விசாரித்துள்ளனர். அப்போது தனது இடத்தில் பசு மாடுகள் மேய்வதால் அவற்றின் மீது கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை ஊற்றியதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தனது இடத்தில் மாடுகள் மேய்ந்தால் இவ்வாறு தான் செய்வேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பசுக்களின் உரிமையாளர்கள் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் மூதாட்டி இடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பசுமாடுகளின் மீது ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
18 cowsAcid attackinvestigationKarnatakaPolice
Advertisement
Next Article