முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

67 வயது முதியவரின் சேட்டை.! சிறுமிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு.! போக்சோவில் தூக்கிய போலீஸ்.!

12:23 PM Dec 29, 2023 IST | 1newsnationuser4
Advertisement

சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 67 வயது முதியவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement

சென்னை புழல் பகுதிக்கு அருகில் உள்ள சக்திவேல் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் 67 வயதான இந்த முதியவர் சோபா மெத்தை பழுது நீக்கும் பணி செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் விஜயகுமார் தனது வீட்டில் வந்து விளையாடும் சிறுமிகளுக்கு தொடர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் இவரைப் பற்றி கூறி அழுதுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவங்கள் தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்தப் புகாரை தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குற்றங்களை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை சிறையில் அடைத்திருக்கிறது.

Tags :
67 Year Old Man ArrestedChennaichild abusePOCSO ActTamilnadu
Advertisement
Next Article