For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

JOB: ஒரு மாதத்தில் 5,100 பேருக்கு வேலை வழங்கப்படும்!… அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!

06:36 AM Feb 23, 2024 IST | 1newsnationuser3
job  ஒரு மாதத்தில் 5 100 பேருக்கு வேலை வழங்கப்படும் … அமைச்சர் சொன்ன குட்நியூஸ்
Advertisement

JOBதமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் 5,100 பேருக்கு ஆர்.ஆர்.பி., வாயிலாக தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழகத்தில் 20 நாட்களில், 1,021 டாக்டர்கள்; 977 நர்ஸ்கள் தேர்வு செய்யப்பட்டு, பெரும்பாலானோர் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள, 332 ஆய்வக பரிசோதகர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் விரும்பிய இடங்களுக்கு, பொது கலந்தாய்வு வாயிலாக பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, 2,250 கிராம சுகாதார செவிலியர்கள், 986 மருந்தாளுனர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 798 பேர் என, 5,100 பணியிடங்கள், ஆர்.ஆர்.பி., வாயிலாக தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

English summary: In Tamil Nadu, the selection process for 5,100 candidates through RRB is going on in one month. People's Welfare Minister Ma Subramanian said that these jobs will be filled in a month.

Readmore:நாம் தமிழர் கட்சி சீமானின் மனைவிக்கு புதிய பொறுப்பு..!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Tags :
Advertisement