முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பதற வைக்கும் சம்பவம்… '5' வயது சிறுமியை சீரழித்த '17' வயது வேன் கிளீனர்..!! போக்சோவில் கைது செய்த போலீஸ்.!

08:40 PM Feb 11, 2024 IST | 1newsnationuser7
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பள்ளியின் வேன் கிளீனர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 வயது சிறுமி எல்கேஜி படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரியவே இது தொடர்பாக பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி படிக்கும் பள்ளியில் வேன் கிளீனர் ஆக வேலை பார்த்து வரும் 17 வயது சிறுவன் தொடர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து வேன் கிளீனரை பிடித்த சிறுமியின் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் கடுமையாக அடித்து உதைத்தனர். அதன் பிறகு குற்றவாளியை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறை அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. 5 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Tags :
crimePOCSO ActTamilnaduThiruvallurViolence against Kids
Advertisement
Next Article