For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உ.பி.யில் வக்கிரத்தின் உச்சம்.! ஆபாச படங்களை பார்த்து 5 வயது சிறுமி வன்புணர்வு.! 8 மற்றும் 10 வயது சிறுவர்கள் இருவர் கைது.!

12:02 PM Feb 11, 2024 IST | 1newsnationuser4
உ பி யில் வக்கிரத்தின் உச்சம்   ஆபாச படங்களை பார்த்து 5 வயது சிறுமி வன்புணர்வு   8 மற்றும் 10 வயது சிறுவர்கள் இருவர் கைது
Advertisement

உத்திரபிரதேசத்தில் தனியார் பள்ளியில் படித்த 5 வயது மாணவியை, உணவு இடைவேளையின் போது அதே பள்ளியில் படித்து வந்த இரண்டு மாணவர்கள் வன்புணர்வு செய்துள்ளனர். ஆபாச வீடியோக்களை பார்த்து இவ்வாறு செய்ததாக அந்த இரு சிறுவர்களும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் தானேபூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 வயது சிறுமி படித்து வந்தார். உணவு இடைவேளையின்போது அதே பள்ளியைச் சேர்ந்த 8 மற்றும் 10 வயதுடைய சிறுவர்களால் அந்த சிறுமி பள்ளி வளாகத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அந்த இரண்டு சிறுவர்களும், 5 வயது சிறுமியை வன்புணர்வு செய்துள்ளனர்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற பின், அந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். அந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அந்த இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

தானேப்பூர் கிராமத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் வினித் ஜெய்ஸ்வால் கூறுகையில், கைது செய்யப்பட்ட அந்த இரு சிறுவர்களும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார். ஆபாச படங்களை பார்த்து இவ்வாறு செய்ததாகவும் அந்த சிறுவர்கள் கூறியிருக்கிறார்கள். இது குறித்த கூடுதல் விசாரணையை நடத்தி வருவதாகவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags :
Advertisement