முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"குழந்தைகளை கட்டியணைத்தபடி ரயில் முன் பாய்ந்த சோகம்.." '40' வயது பெண் '2' குழந்தைகளுடன் தற்கொலை.! காவல்துறை விசாரணை.!

09:55 AM Feb 12, 2024 IST | 1newsnationuser4
Advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் .

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உத்தாணி குடமுற்று ஆற்றுப்பாலம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள், உடல் சிதறிய நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் தனது 8 வயது மற்றும் 10 வயது பெண் குழந்தைகளுடன் செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த தாய் தனது 2 குழந்தைகளையும் கட்டி அணைத்தவாறு ரயில் முன் பாய்ந்ததாக காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி ரயில்வே டிஎஸ்பி மகாதேவன், இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தனலட்சுமி பாலசுப்பிரமணியன் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரியின் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து இறந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த நபர்களின் விவரங்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள்.? என்பது குறித்தும் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. தாய் தன் பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Daughtersmotherpolice investigationSuicidetanjoretrain accident
Advertisement
Next Article