முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

21வயது ஆர்த்திக்கு 40வயது சுரேஷ் பாபுவுடன் கள்ளத்தொடர்பு..! உல்லாசத்தில் இருப்பதை கண்டித்த தந்தை..! தலைக்கேறிய போதை..!

07:05 AM May 04, 2024 IST | shyamala
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். சுரேஷ்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி தனது 2வது மகளுடன் பிரிந்து சென்று விட்டார். மூத்த மகளான ஆர்த்தி தந்தையுடன் வசித்து வந்தார். 21 வயதான ஆர்த்தி நர்சிங் படித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில், கடந்த 26ம்  தேதி, காலையில் தந்தை சுரேஷ்குமார் இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினருக்கு ஆர்த்தி தெரிவித்து உள்ளார். இரவில் அதிகமாக மது குடித்ததால் இறந்து விட்டதாக ஆர்த்தி தெரிவித்து இருக்கிறார்.

இதனையடுத்து, சுரேஷ்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சிலர் போலீசிற்கு தகவல் தெரிவிக்க, பூதப்பாண்டி போலீசார் மகள் ஆர்த்தியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சுரேஷ்குமாரின் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வில் சுரேஷ்குமார் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனால், சந்தேகம் அடைந்த புதுப்பாண்டி போலீசார் ஆர்த்தியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. தனது வீட்டிருகிலேயே சுரேஷ்பாபு என்பவர் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் என்றும், 40 வயதான சுரேஷ்பாபுவுக்கும், 21 வயதான நர்சிங் மாணவி ஆர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

மகள் ஆர்த்தியும், சுரேஷ்பாபுவும் ரகசிய உறவில் இருப்பதை அறிந்த தந்தை சுரேஷ்குமார் இருவரையும் கண்டித்து இருக்கிறார். இருவரும் மேற்கொண்டு சந்திக்காதவாறு தந்தை சுரேஷ்குமார் கண்காணித்து வந்ததுள்ளார். இந்நிலையில், இருவரும் தனிமையில் சந்திக்க இடையூறாக இருக்கும் தந்தையை தீர்த்துக்கட்ட, மகள் ஆர்த்தி மற்றும் சுரேஷ்பாபு சதி திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி சம்பவத்தன்று சுரேஷ்பாபு, டாஸ்மாக்கில் இருந்து மது வாங்கி  கொண்டு வந்து சுரேஷ்குமாருடன் சேர்ந்து வீட்டு அருகே அமர்ந்து மது குடிக்க, சுரேஷ்குமாருக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்துள்ளார் சுரேஷ்பாபு. போதை தலைக்கேற மயக்கம் அடைந்த சுரேஷ்குமாரை கை தாங்கலாக அழைத்து சென்று வீட்டில் படுக்க வைத்துள்ளார் சுரேஷ்பாபு.

பின்னர் மகள் ஆர்த்தியும், சுரேஷ்பாபுவும் சேர்ந்து சுரேஷ்குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடியது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆர்த்தி மற்றும் சுரேஷ்பாபு இருவரையும் பூதப்பாண்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 21 வயது மகளின் ரகசிய உறவை தட்டிக் கேட்ட தந்தையை கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா…? பரபரப்புக்கு மத்தியில் நிறுவனம் விளக்கம்…!

Tags :
illegal affairkanniyakumari crimeகள்ளத்தொடர்பு
Advertisement
Next Article