மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!!
விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 8, 9, 10 மற்றும் 13ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றார். அவர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் காலியான அத்தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : சிறுமியுடன் அடிக்கடி உல்லாசம்..!! வீடியோ எடுத்த காதலன்..!! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தந்தை..!!