For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அட கொடுமையே.. "17 வயது சிறுவனை 30 முறை.." பாலியல் புகாரில் சிக்கிய 33 வயது ஆசிரியை.!

08:41 PM Jan 24, 2024 IST | 1newsnationuser7
அட கொடுமையே    17 வயது சிறுவனை 30 முறை    பாலியல் புகாரில் சிக்கிய 33 வயது ஆசிரியை
Advertisement

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 33 வயது ஆசிரியை பள்ளி மாணவனுடன் தவறான உறவில் இருந்ததை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் தனக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Advertisement

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் பகுதியை சேர்ந்த ஹீத்தர் ஹாரி என்ற 33 வயது பெண் அங்குள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 17 வயது மாணவன் ஜேஆர் என்பவர் ஆசிரியை மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக ஆசிரியை ஹீத்தரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது ஆசிரியை மாணவனுடன் தனது வீடு, ஹோட்டல் அறை, பள்ளியின் வாகனம் நிறுத்தும் இடம் மற்றும் வகுப்பறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைத்து 30-ற்கும் மேற்பட்ட முறை பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்வியை தொடர்ந்து நீதிமன்றத்தில் வாய்விட்டு கதறி அழுத ஆசிரியை தனது குற்றங்களை ஒப்புக் கொண்டார் .

மேலும் தனக்கு குறைந்தபட்ச தண்டனையாக 13 வருட சிறை தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் மன்றாடினார். இது தொடர்பாக நீதிபதி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement