முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

PM Scheme: 60 வயதை எட்டிய விவசாயிகளுக்கு மாதம் தோறும் ரூ.3,000...!

3,000 per month for farmers who have reached 60 years of age
11:24 AM Sep 10, 2024 IST | Vignesh
Advertisement

வயதான காலத்தில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு சூழலை வழங்குவதற்கான சிறப்புமிக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

Advertisement

முதியோர் ஓய்வூதிய திட்டம் ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குறு, சிறு விவசாயிகளுக்கு 60 வயதை எட்டிய பிறகு மாதந்தோறும் ரூ.3,000 நிலையான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தகுதி பெற, விவசாயிகள் தங்கள் வேலை ஆண்டுகளில் ஓய்வூதிய நிதிக்கு மாதாந்திர பங்களிப்பை வழங்குகிறார்கள், அதற்கு இணையான மத்திய அரசின் பங்களிப்புகளும் உள்ளன.

வயதான காலத்தில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு சூழலை வழங்குவதற்கான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ், குறு, சிறு விவசாயிகள் ஓய்வூதிய நிதிக்கு மாதாந்திர சந்தா செலுத்துவதன் மூலம் பதிவு செய்யலாம். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட விவசாயிகள் 60 வயது வரை, மாதத்திற்கு ரூ.55 முதல் ரூ.200 வரை பங்களிப்பு செய்ய வேண்டும்.

60 வயதை எட்டியதும், பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறுவார்கள். ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கிறது, மேலும் பயனாளிகள் பதிவு பொது சேவை மையங்கள் (சி.எஸ்.சி) மற்றும் மாநில அரசுகள் மூலம் எளிதாக்கப்படுகிறது. 2 ஹெக்டேர் வரை சாகுபடி செய்யக்கூடிய நிலங்களைக் கொண்ட மற்றும் 2019 ஆகஸ்ட் 1 நிலவரப்படி மாநிலயூனியன் பிரதேச நிலப் பதிவுகளில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளும் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள். 2024, ஆகஸ்ட் 6, நிலவரப்படி, மொத்தம் 23.38 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

மேலும், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் முறையே, 2.5 லட்சம், 2 லட்சம் மற்றும் 1.5 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். மிகப்பெரிய பதிவு இந்த மாநிலங்களில் வலுவான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது, இது விவசாயிகளுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதில் திட்டத்தின் அணுகல் மற்றும் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

Tags :
central govtfarmersPM ModiPM Scheme
Advertisement
Next Article