முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி ; சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி பெயரில் 3000 போலி விண்ணப்பங்கள்!!

04:13 PM May 28, 2024 IST | Mari Thangam
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்ட நிலையில் 3000 போலி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டிராவிட்டின் பதவிகாலம் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ப்ளம்மிங் போன்றோரிடம் பயிற்சியாளர் பதவி தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை மறுத்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைமை பயிற்சியாளர் பதவி தொடர்பாக தாங்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த யாரையும் அணுகவில்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் அப்பொறுப்புக்கு வருபவர்கள், இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்புகளை முழுமையாக தெரிந்த ஒருவராக இருக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் பெறும் கடைசி நாள் நேற்று (27/05/24) முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தோனி, டெண்டுல்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ற பெயர்களில் போலி விண்ணப்பங்களுடன் கிட்டத்தட்ட 3000 விண்ணப்பங்களை பிசிசிஐ பெற்றுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான எம்.எஸ்.தோனி, சேவாக், ஹர்பஜன் சிங், டெண்டுல்கர் போன்றோரது பெயர்கள் மட்டுமல்லாது அரசியல் தலைவர்களான பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோரது பெயர்களிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் காரணமாக இதில் உண்மையாகவே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனரா என்பதைக் கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளது.

பிசிசிஐ மே 13 ஆம் தேதி Google forms-ல் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களைப் பெறுவதாக அறிவித்திருந்தது. இதில் போலி விண்ணப்பங்களும் அனுப்பப்பட்டுள்ளன. முன்னாள் கிரிக்கெட் வீரர்களான எம்.எஸ்.தோனி, சேவாக், ஹர்பஜன் சிங், டெண்டுல்கர் போன்றோரது பெயர்கள் மட்டுமல்லாது அரசியல் தலைவர்களான பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோரது பெயர்களிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் காரணமாக இதில் உண்மையாகவே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனரா என்பதைக் கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ராகுல் டிராவிட் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்பி இந்திய அணிக்கான பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாக கூறப்படுகிறது. உண்மையான விண்ணப்பதாரர்களின் பெயர்களை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை. இந்திய ஆடவர் அணியின் பயிற்றுவிப்பாளராக மதிப்புமிக்க பங்கை யார் ஏற்கலாம் என்பது குறித்து பல ஊகங்கள் உள்ளன.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் சுலக்ஷனா நாயக், அசோக் மல்ஹோத்ரா மற்றும் ஜதின் பரஞ்சபே உள்ளிட்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் நேர்காணலுக்கு உட்படுத்தப்படுவார்கள். புதிய தலைமைப் பயிற்சியாளரின் பதவிக்காலம் ஜூலை 1, 2024 முதல் டிசம்பர் 31, 2027 வரை மூன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

Read more ; ’ஐய்யோ என்ன விட்ருங்க’..!! 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பெரியப்பா மகன்..!! மேலும் இருவர் கூட்டு..!!

Tags :
amit shahBccifake applicationsGautam Gambhirindian cricket coachJey shahMS DhoniPM Modisachin tendulkar
Advertisement
Next Article