முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குட் நியூஸ்..‌! 30 லட்சம் பேர் ஓய்வூதிய திட்டத்தில் இணைப்பு...! மத்திய அமைச்சர் தகவல்

30 lakh people are linked in the pension scheme
08:28 AM Oct 02, 2024 IST | Vignesh
Advertisement

மொத்தம் உள்ள 32 லட்சம் பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களில், 30 லட்சம் பேர், ஸ்பார்ஷ் {ஓய்வூதிய நிர்வாகத்திற்கான அமைப்பு (பாதுகாப்பு)} இணையதளத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்; மொத்தம் உள்ள 32 லட்சம் பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களில், 30 லட்சம் பேர், ஸ்பார்ஷ் {ஓய்வூதிய நிர்வாகத்திற்கான அமைப்பு (பாதுகாப்பு)} இணையதளத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் பாராட்டிய பாதுகாப்புத் துறை அமைச்சர், பல சவால்கள் இருந்தபோதிலும், இணைய அடிப்படையிலான இந்த முறையை செயல்படுத்துவதில், துறை வெற்றிகரமாக உள்ளது. இது ஓய்வூதிய கோரிக்கைகளை செயலாக்குவதுடன் ஓய்வூதியத்தை எந்தவொரு வெளிப்புற இடைத்தரகரும் இல்லாமல் நேரடியாக பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கிறது.

பாதுகாப்பு செலவினம் குறித்த விரிவான புள்ளிவிவர கையேடு (COSHE) 2024, சந்தை நுண்ணறிவு அறிக்கை 2023-24 மற்றும் பாதுகாப்பு பயண அமைப்பு 2.0 ஆகியவை, பிற வெளியீடுகள் மற்றும் முன்முயற்சிகளில் அடங்கும். ஆதார வளங்களை, உகந்த முறையில் பயன்படுத்துதல், கணக்கியலில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம், நாட்டின் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பை நவீனமயமாக்குதல் மற்றும் வலுப்படுத்துவதற்கான டிஏடியின் முயற்சிகளை, பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.

Advertisement
Next Article