முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

என்கவுண்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!… பாதுகாப்பு படையினர் அதிரடி!

05:44 AM Apr 07, 2024 IST | Kokila
Advertisement

Encounter: சத்தீஸ்கர் - தெலுங்கானா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில், மூன்று நக்சல்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Advertisement

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள புஜார் காங்கேர் வனப்பகுதி, தெலுங்கானா மாநில எல்லையில் உள்ளது. இங்கு நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெலுங்கானாவின் நக்சல் சிறப்பு எதிர்ப்பு படையுடன் இணைந்து சத்தீஸ்கர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் சுட்டனர். இரு தரப்புக்கும் நடந்த மோதலில், மூன்று நக்சல்கள் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் நக்சல்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சில நக்சல்கள் வனப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Readmore: Earthquake: ஆப்கானிஸ்தானில் அதிகாலை ஏற்பட்ட 2 பயங்கர நிலநடுக்கம்…! அலறியடித்த மக்கள்…!

Advertisement
Next Article