முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உடல் கருகி பலி..!!

3 Killed After Helicopter Crashes In Hilly Area Near Pune
10:13 AM Oct 02, 2024 IST | Mari Thangam
Advertisement

மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டம், பவ்தான் பகுதியில் புதன்கிழமை காலை ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் அரசுக்கு சொந்தமானதா, அல்லது தனியார் ஹெலிகாப்டரா என்பது தெரியவில்லை. ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் மற்றும் ஒரு பொறியாளர் இருந்தனர். ஹெலிகாப்டர் தரையில் மோதி தீ பிடித்து எரிந்ததில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 விமானிகள், ஒரு பொறியாளர் உடல் கருகி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இன்று காலை 6.45 மணியளவில் மலைப்பாங்கான பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக புனேவின் பிம்ப்ரி சின்ச்வாட் போலீசார் தெரிவித்தனர். அதிகாரிகள் கூறுகையில், "புனே மாவட்டத்தில் உள்ள பாவ்தான் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இது யாருடைய ஹெலிகாப்டர் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை," என்று மூத்த இன்ஸ்பெக்டர் கன்ஹையா தோரட் கூறினார்,

ஆக்ஸ்போர்டு கோல்ஃப் கிளப்பின் ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டதாகவும், அப்பகுதியில் இருந்த அடர்ந்த பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; ஜம்மு காஷ்மீர் | சூரன்கோட் பாஜக வேட்பாளர் சையத் முஷ்டாக் புகாரி காலமானார்..!!

Tags :
helicopter crashpune
Advertisement
Next Article