முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 ரசிகர்கள்…! நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் யாஷ்…!

10:34 AM Jan 09, 2024 IST | 1Newsnation_Admin
Advertisement

கன்னட தொலைக்காட்சி தொடர்கள் மூலம் கலைப்பயணத்தை தொடங்கி, 2007 ஆம் ஆண்டு வெளியான ஜம்பதா ஹுடுகி என்ற படம் மூலம் கன்னட திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் நடிகர் யாஷ். கன்னடத்தில் பல படங்களில் நடித்திருந்த நடிகருக்கு இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் அறியும் வகையில் கொண்டு சேர்த்த படம் தான் "கேஜிஎஃப்" இந்த படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்திய ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகராக திகழ்ந்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நடிகர் யாஷ்-ன் 38வது பிறந்தநாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளுக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக வாழ்த்து தெரிவித்திருந்தனர். கர்நாடக மாநில கடக் மாவட்டத்தில் நடிகர் யாஷ் பிறந்தநாளை சிறப்பிக்க ரசிகர்கள் பேனர் வைக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்னழுத்த கம்பி மீது பேனர் உரசியதில் 3 பேர் உயிரிழந்தனர், மேலும் மூன்று ரசிகர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பேனர் வைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 ரசிகர்களின் குடும்பத்தினரை நேற்றைய தினம் அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் நடிகர் யாஷ். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 3 ரசிகர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து அறுதல் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதுபோன்ற வெறித்தனமான செயல்களை எதிர்பார்க்கவில்லை என்றும் தனது ரசிகர்கள் தங்கள் குடும்பத்திற்கு பொறுப்பாக இருக்க வேண்டும்" என்றும் யாஷ் கூறினார். இது போல நிகழக்கூடும் என்ற காரணத்திற்காக தான் பிறந்தநாளை கொண்டாடுவதில்லை என்றும் தெரிவித்தார்.

Tags :
actor yashநடிகர் யாஷ்
Advertisement
Next Article