For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்.! போலீசார் வலை வீச்சு.! உடந்தையாக இருந்த 9 வயது சிறுவன்.!

11:09 AM Feb 02, 2024 IST | 1newsnationuser4
3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்   போலீசார் வலை வீச்சு   உடந்தையாக இருந்த 9 வயது சிறுவன்
Advertisement

கடந்த ஆறு மாத காலமாக, சென்னை திருவான்மியூர் பகுதியில், மூன்று 7 முதல் 10 வயதுடைய சிறுமிகளை மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து இந்த குற்ற செயலில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement

கடந்த சில நாட்களாக, சென்னை திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு நான்காவது படிக்கும் ஒன்பது வயது சிறுவன், சாக்லேட் கொடுப்பதாக கூறி 7 முதல் 10 வயதுடைய மூன்று சிறுமிகளை அழைத்துச் சென்றுள்ளான். அந்த குடியிருப்பில் இருந்த ஒரு நபர் இந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமிகளின் பெற்றோர் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கு குறித்து கடந்த பிப்ரவரி
1ஆம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்த போலீசார், அந்த மர்ம நபரை மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

அந்த மர்ம நபர், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 30 வயதுடையவர் என்பது முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபர் கடந்த ஆறு மாத காலமாக இந்த சிறுமிகளை சாக்லேட் கொடுப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாக இருக்கும் அந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர் மேலும் இதற்கு உதவிய நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனையும் விசாரித்து வருகின்றனர். அந்த மர்ம நபர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 366 மற்றும் போக்சோவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement