முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தனக்குத் தானே 'RIP' போஸ்ட்.! தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.! காவல்துறை விசாரணையில் வெளியான உண்மை.!

05:55 AM Dec 10, 2023 IST | 1newsnationuser4
Advertisement

கேரளாவின் அலுவா மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இறப்பதற்கு முன் அந்த இளைஞர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுயமாக இரங்கல் செய்தியை பதிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

அலுவா அழுவா மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதினர் அட் ஜிமல் ஷெரிஃப். இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆறு முப்பது மணிக்கு தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .மேலும் தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியது காவல்துறை.

இந்த விசாரணையில் நல்ல வேலை கிடைக்காத விரக்தியில் அந்த இளைஞர் தற்கொலை முடிவு எடுத்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் போஸ்ட்மார்ட்டம் முடிந்து அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலையில் காவல்துறையினர் அவரது சமூக வலைதள பக்கத்தை பரிசோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

இறந்த இளைஞர் அஜ்மல் தான் இறப்பதற்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுயமாக இரங்கல் செய்தியை பதிவிட்டு இருக்கிறார். அந்தச் செய்தியில் ரெஸ்ட் இன் பீஸ் அஜ்மல் ஷெரிஃப் 1995-2023 என பதிவு செய்து இருக்கிறார். இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags :
crimeInsta InfluencerKeralaObituary PostSuicide
Advertisement
Next Article