For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

23 வயது மாடல் அழகி பாலியல் வன்புணர்வு.! சூட்டிங் இருப்பதாக ஏமாற்றி கற்பழித்த இளைஞர்.! போலீஸ் விசாரணை.!

07:32 PM Dec 30, 2023 IST | 1newsnationuser4
23 வயது மாடல் அழகி பாலியல் வன்புணர்வு   சூட்டிங் இருப்பதாக ஏமாற்றி கற்பழித்த இளைஞர்   போலீஸ் விசாரணை
Advertisement

இமாச்சல பிரதேசம் சிம்லாவில் சூட்டிங் இருப்பதாக ஹோட்டலுக்கு அழைத்து மாடல் அழகி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement

பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்த 23 வயது மாடல் அழகி சிம்லாவில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருக்கிறார். அப்போது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் சூட்டிங் இருப்பதாக கூறி தனது அறைக்கு அழைத்திருக்கிறார். இந்தப் பெண் அவரது அறையை அடைந்தபோது அந்த இளைஞர் மாடல் அழகியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிம்லா காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement