For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மீண்டும் ஒரு கள்ளக்காதல் கொலை.! கல்குவாரியில் பிணமாக மீட்கப்பட்ட 22 வயது இளைஞர்.! 2 பேர் கைது.!

12:44 PM Dec 12, 2023 IST | 1newsnationuser4
மீண்டும் ஒரு கள்ளக்காதல் கொலை   கல்குவாரியில் பிணமாக மீட்கப்பட்ட 22 வயது இளைஞர்   2 பேர் கைது
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத அரசு கல்குவாரியில் 22 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் கள்ளத்தொடர்பு காரணமாக கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது நபர் தலைமறைவாக இருக்கிறார்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசஹள்ளி பகுதியில் மூடப்பட்டிருந்த கல்குவாரியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இறந்த நபர் 22 வயதான முத்துமணி என தெரிய வந்திருக்கிறது.

மேலும் கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக இவர் கொலை செய்யப்பட்டதும் காவல்துறை விசாரணையில் உறுதியாகி உள்ளது. கொலை செய்யப்பட்ட முத்துமணி கருப்பன் என்பவரது உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவில் இருந்திருக்கிறார். இது தொடர்பாக கருப்பன் பலமுறை கண்டித்தும் முத்துமணி கேட்கவில்லை. இதனால் முத்துமணியின் உறவினர்களான சரவணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோரின் உதவியுடன் பயன்பாட்டில் இல்லாத கல்குவாரிக்கு முத்துமணியை அழைத்து வந்து மது குடிக்க வைத்து கொலை செய்து 30 அடி பள்ளத்தில் வீசியது தெரிய வந்திருக்கிறது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக சரவணன் மற்றும் முத்துக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான கருப்பனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இளைஞர் கொலை செய்யப்பட்டு கல்குவாரியில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement