முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாகிஸ்தானில் பரபரப்பு..!! பயணிகள் பேருந்து மீது துப்பாக்கிச்சூடு.. 23 பேர் பலி.!!

22 Killed In Pakistan After Gunmen Stop Vehicles, Start Shooting
12:25 PM Aug 26, 2024 IST | Mari Thangam
Advertisement

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில் 23 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இன்று அதிகாலை முசகேல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில், பயணிகள் பேருந்து ஒன்றும், டிரக் ஒன்றும் பயங்கரவாதிகளால் வழிமறிக்கப்பட்டிருக்கிறது. பேருந்து செல்லும் பாதையில் காற்களை அடுக்கி, செல்ல வழியில்லாமல் வாகனங்கள் சாலையில் நின்றிருந்தபோது, அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் பேருந்து மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

இதனையடுத்து, இரண்டு வாகனங்களிலிருந்துவர்களை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்ற பயங்கரவாதிகள், அவர்களை சுட்டு கொன்றிருக்கின்றனர். மட்டுமல்லாது அவர்கள் வந்த வாகனங்களையும் தீவைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களை அடையாளம் காணும் பணியும் மர்ம நபரை தேடும் பணியும் நடநது வருகிறது.

தாக்குதல் நடத்திய கும்பல் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது இன்னும் தெரியவரவில்லை. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபர் அதனைத் தொடர்ந்து, அருகில் இருந்த 12 வாகனங்கள் மீதும் துப்பாக்கியால் தாக்கியதாகவும், நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். பல்வேறு தரப்பினரும் பயங்கரவாதிகளின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் மாகாணத்தை குறி வைத்த இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Read more ; பாலிகிராஃப் சோதனை என்றால் என்ன?. அது ஏன் நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது?

Tags :
Balochistandeathpakistanதுப்பாக்கிச்சூடு
Advertisement
Next Article