முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2050-க்குள் இந்த சம்பவம் நடக்கப் போகுது..!! மிகப்பெரிய அபாயம்..!! வெளியான எச்சரிக்கை ஆய்வறிக்கை..!!

Shocking information has been revealed in the study that if urgent measures are not taken to protect water resources, there is a risk of halving the world's food production in the next 25 years.
01:56 PM Oct 18, 2024 IST | Chella
Advertisement

நீர் வளத்தை பாதுகாக்க அவசர நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அடுத்த 25 ஆண்டுகளில் உலக உணவு உற்பத்தி பாதியாக குறையும் அபாயம் எழுந்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தண்ணீர் பற்றாக்குறை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் 2050ஆம் ஆண்டுக்குள் உலக உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என உலகளாவிய தண்ணீர் பொருளாதாரத்துக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2022இல் உருவான உலகளாவிய தண்ணீர் பொருளாதாரத்துக்கான ஆணையம், விஞ்ஞானிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களை கொண்டு நடத்தப்பட்ட நீர் தேவை குறித்த ஆய்வின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில், உலகளவில் 200 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமலும், 360 கோடி மக்கள் சுகாதார குறைபாட்டுடனும் உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஆயிரம் குழந்தைகள் சுத்தமான நீர் கிடைக்காத காரணத்தால் உயிரிழக்கின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் சுத்தமான நீருக்கான தேவை 40% ஆக உயரக்கூடும். இது மோசமடையும் பட்சத்தில், 2050இல் உலகளவில் 8% ஜிடிபி இழக்கக்கூடும்.

ஏழை நாடுகள் 15% வரை இழப்பை சந்திக்கும். இதனால், உலகளவில் உணவு உற்பத்தி பாதியாக குறைந்துவிடும். மோசமான பொருளியல்நிலை, வளங்களை முறைகேடாகப் பயன்படுத்துதல் போன்றவையே உலக நீர் நெருக்கடியை மோசமாக்கியதாக அறிக்கை தெரிவித்துள்ளது. சுகாதாரமான ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு ஒருவருக்கு ஒரு நாளுக்கு 50 முதல் 100 லிட்டர் நீர் தேவைப்பட்டாலும், போதுமான ஊட்டச்சத்து மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கு சுமார் 4,000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.

உலகளவில் நீர் அமைப்புகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தாலும், அதனை நிர்வகிக்கும் கட்டமைப்புகள் ஏற்படுத்தவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் நீர் தொடர்பான ஒரே ஒரு மாநாட்டை மட்டுமே ஐ.நா. நடத்தியுள்ளது. கடந்த மாதம்தான் நீருக்கான சிறப்புத் தூதரை ஐ.நா. நியமனம் செய்தது. பல நாடுகளில் தொழிற்சாலைகள் நீரை உபயோகிக்க மானியம் வழங்கப்படுகிறது. வளரும் நாடுகளில் உள்ள ஏழை மக்கள் நீர் தேவைக்கு அதிக விலை கொடுக்கும் சூழல் உள்ளது.

மேலும், சுகாதாரமற்ற நீரை பயன்படுத்துவதற்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். தீங்கு விளைவிக்கும் மானியங்களை அகற்றுவதும், ஏழை மக்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வதையும் அரசாங்கங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். மேலும், சுழற்சிக்கு முக்கியமாக இருக்கும் நீர் தேக்கங்களின் அழிவை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வளரும் நாடுகள் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Read More : வங்கக் கடலில் மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! புயலாக மாறுமா..? இந்திய வானிலை மையம் பரபரப்பு தகவல்..!!

Tags :
ஆய்வறிக்கைஉணவுதண்ணீர்
Advertisement
Next Article