முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2 இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம்..!! தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!

In Thoothukudi, two young women were threatened and raped.
12:31 PM Sep 14, 2024 IST | Chella
Advertisement

தூத்துக்குடியில் இரண்டு இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சமீப காலமாக தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. அதைப் போலவே கஞ்சா போதையில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜெசிந்த் (23). இவர், கல்லூரி மாணவி ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த ரெனால்ட் (25) என்பவர், 18 வயது இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெனால்ட்டைக் கைது செய்து, போக்சோ வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : நிர்மலா சீதாராமன் – அன்னபூர்ணா விவகாரம்..!! முதல்வர் கொடுத்த ரியாக்‌ஷன்..!! அந்த பெயரை கூட சொல்லலையே..!!

Tags :
இளம்பெண்கள்தூத்துக்குடி மாவட்டம்பாலியல் பலாத்காரம்
Advertisement
Next Article