For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம்!… மணிப்பூரில் பதற்றம்!

08:22 AM Apr 27, 2024 IST | Kokila
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் … மணிப்பூரில் பதற்றம்
Advertisement

Terrorist attack: மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 2 பேர் வீர மரணமடைந்தனர்.

Advertisement

மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் நள்ளிரவு 2.15 மணியளவில் தீவிரவாதிகள் - சிஆர்பிஎஃப் வீரர்களிடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இதில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை 128 பட்டாலியனை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணமடைந்ததாக மணிப்பூர் போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக, பொதுத் தேர்தலின் முதல் கட்டத்தின் போது சத்தீஸ்கரில் ஒரு IED குண்டுவெடிப்பில் CRPF இன் உதவி கமாண்டன்ட் ஒருவர் காயமடைந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

Readmore: சின்னம்மை எச்சரிக்கை!… தனிமைப்படுத்துங்கள்!… இதெல்லாம் கட்டாயம் தவிர்க்கவேண்டும்!

Advertisement