For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

18 தமிழக மீனவர்கள் கைது!…மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

06:48 AM Jan 17, 2024 IST | 1newsnationuser3
18 தமிழக மீனவர்கள் கைது …மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்
Advertisement

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் உங்கள் உறுதியான உறுதிப்பாட்டிற்காக, தமிழக பாஜக மற்றும் தமிழக மீனவர்கள் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டதையும், இந்த மீனவர்களின் 2 மீன்பிடி படகுகளும் கைது செய்யப்பட்டதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட்டு, கைதான 18 தமிழக மீனவர்களை விரைவாக தாயகம் திரும்பவும், அவர்களின் மீன்பிடி படகுளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement