முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"அம்மா என்ன சரியாவே பாத்துக்கல.." பெத்த தாயை கொலை செய்த '17' வயது சிறுவன்..!! பரபரப்பு வாக்குமூலம்.!

07:50 PM Feb 03, 2024 IST | 1newsnationuser7
Advertisement

பெங்களூர் நகரில் 41 வயது பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக அந்த பெண்ணின் 17 வயது மகன் காவல்துறையில் சரணடைந்துள்ளார். பெங்களூர் நகரின் ஜஸ்ட் பீமையா லேஅவுட்டில் வசித்து வருபவர் நேத்ரா(41).

Advertisement

இவரது மகன் கல்லூரியில் படித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்த சிறுவன் தனக்கு விரைவாக உணவு சமைத்து கொடுக்குமாறு தாயிடம் கேட்டிருக்கிறார். இது தொடர்பாக தாய் மற்றும் மகனிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த மகன் இரும்பு கம்பியால் தனது தாயை தாக்கி இருக்கிறார்.

இதில் சம்பவ இடத்திலேயே நேத்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மகன் காவல் நிலையத்தில் சென்று சரண் அடைந்துள்ளார். மேலும் தனது தாய் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்றும் தனக்கு ஒழுங்காக உணவு சமைத்துக் கொடுக்கவில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். 17 வயது சிறுவன் பெற்ற தாயை கொலை செய்து சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது .

Tags :
17 Year Old Boy SurrenderBengaluruindiaMother Murderedpolice investigation
Advertisement
Next Article