முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கௌரவக் கொலை: "கண்டவன் கூட காதல் கேக்குதோ."! சொந்த அக்காவை கொடூரமாக வெட்டி சாய்த்த 17 வயது சிறுவன்.!

12:07 PM Dec 06, 2023 IST | 1newsnationuser4
Advertisement

நெல்லை மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக சொந்த அக்கா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் 17 வயது சகோதரர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் ஆசீர். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். இவரது மகள் தங்கத்தாய்(21) அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூக இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு அவரது குடும்பத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வந்திருக்கிறது. அவரை காதலை கைவிடுமாறு குடும்பத்தினர் வற்புறுத்தி வந்த நிலையில் தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரத்திலிருந்த அவரது 17 வயது தம்பி தனது அக்கா தங்கத் தாயை சராமாறியாக வெட்டி கொடூரமாக படுகொலை செய்திருக்கிறார். சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மாற்று சமூக இளைஞரை காதலித்ததற்காக இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சொந்தத் தம்பியே அக்காவை கொடூரமாக கொலை செய்தது மக்களை அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட சிறுவனிடம் காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
brotherhonour killingmurderSistertirunelveli
Advertisement
Next Article