For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து..!! 17 மாணவர்கள் உயிரிழந்த பரிதாபம்.. கென்யாவில் சோகம்..

17 students killed, 14 seriously injured as devastating fire sweeps Kenya school dormitory
12:44 PM Sep 06, 2024 IST | Mari Thangam
பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து     17 மாணவர்கள் உயிரிழந்த பரிதாபம்   கென்யாவில் சோகம்
Advertisement

கென்யாவில் உள்ள பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

நைரியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா ஆரம்பப் பள்ளியில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரெசிலா ஒன்யாங்கோ தெரிவித்தார். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கென்யா உறைவிடப் பள்ளிகளில் தீ விபத்து அடிக்கடி நிகழ்கின்றது. மாணவர்களிடையே ஏற்படும் மோதல்கள் காரணமாக இந்த தீ விபத்து ஏற்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்த இந்த நிறுவனங்களைத் தேர்வு செய்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில், பள்ளி தீவிபத்துகள் மாணவர் அமைதியின்மையுடன் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு தலைநகர் நைரோபியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.

தற்போது கென்யா பள்ளியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த அதிகாரிகள், நாடு முழுவதும் உள்ள உறைவிட பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தியுள்ளார். இந்த தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 14 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read more ; மக்களே.. இந்த தினங்களில் மட்டும் சுங்கசாவடியில் கட்டண வசூல் கிடையாது..!! முக்கிய அறிவிப்பு..

Tags :
Advertisement