முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

லாவோஸ் நாட்டில் சிக்கி தவித்த 17 இந்தியர்கள் மீட்பு!! - ஜெய்சங்கர்

09:33 AM Apr 07, 2024 IST | Mari Thangam
Advertisement

லாவோசில் பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றி வந்த 17 இந்தியர்களை பத்திரமாக மீட்ட இந்திய துாதரகம், அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது.

Advertisement

கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில், இந்திய இளைஞர்கள் ஆன்லைன் மோசடி உட்பட பல்வேறு சட்ட விரோத வேலைகளில் ஈடுபடுத்தும் போக்கு சில காலமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பல்களால் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட 17 இந்தியர்களை மீட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “லாவோஸ்நாட்டில் பாதுகாப்பற்ற சூழலில் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட 17 இந்தியர்கள் தற்போது பத்திரமாக இந்தியா திரும்பிக் கொண்டிருக்கின்றனர். உள்நாட்டில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல; வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் மோடியின் உத்தரவாதம் உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.

கம்போடியாவில் இந்திய இளைஞர்களை கட்டாயப்படுத்தி நிதி மோசடி வேலைகளில் ஈடுபடுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு பலர் மீட்கப்பட்டுள்ளனர். எனவே, வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags :
External Affairs Minister Jaishankarlaosunsafe work in Laos
Advertisement
Next Article