For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"பெற்றோர் முன்னிலையில்.." 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.! துப்பாக்கி முனையில் மிரட்டல்.!

09:51 AM Feb 02, 2024 IST | 1newsnationuser4
 பெற்றோர் முன்னிலையில்    15 வயது சிறுமி  கூட்டு பலாத்காரம்   துப்பாக்கி முனையில் மிரட்டல்
Advertisement

மத்திய பிரதேசத்தில் 15 வயது சிறுமியை, பெற்றோரின் கண்முன்னே துப்பாக்கி முனையில் மிரட்டி மூன்று நபர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விசாரணையை போலீசார் துவங்கியுள்ளனர்.

Advertisement

கடந்த திங்கட்கிழமை இரவு, மத்திய பிரதேசத்தின், குவாலியர் மாவட்டத்தில் உள்ள பன்வர்பூர் பகுதியில் 15 வயது சிறுமியை, மூன்று நபர்கள் அந்த சிறுமியுடைய பெற்றோரின் கண்முன்னே கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். துப்பாக்கியை வைத்து மிரட்டி இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் மீனா தெரிவித்தார். மேலும் சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததுடன், அவளுடைய பெற்றோரையும் அந்த மூவரும் தாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சிறுமியின் குடும்பம் ஒரு மாதத்திற்கு முன்பு தான் இந்த ஊருக்கு குடி பெயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 323, 376, 376 டி, 458, 506 மற்றும் போக்சோ (பாலியல் குழந்தைகளைப் பாதுகாத்தல்) ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்த விசாரணையை துவங்கி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement