For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மனைவியுடன் 15 வயது சிறுவனுக்கு கள்ளத்தொடர்பு..!! நண்பனுடன் சேர்ந்து கொலை செய்து உடலை தூக்கி வீசிய கணவன்..!!

He took the boy with him with the help of his friend and strangled him to death.
10:35 AM Oct 19, 2024 IST | Chella
மனைவியுடன் 15 வயது சிறுவனுக்கு கள்ளத்தொடர்பு     நண்பனுடன் சேர்ந்து கொலை செய்து உடலை தூக்கி வீசிய கணவன்
Advertisement

15 வயது சிறுவன், தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகம் எழுந்ததால், நண்பன் உதவியுடன் சிறுவனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஹரியானா மாநிலம் குரிகிராமில் உள்ள களில்பூர் கிலாவாஸ் அணை பகுதியில் 15 வயது சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 26ஆம் தேதி சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில், ரேவாரி மாவட்டத்தில் உள்ள சில்ஹார் கிராமத்தைச் சேர்ந்த அமித் குமார் (28), தருண் ஜோனி (29) ஆகிய இருவர் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், சந்தேகத்தின் பேரில் சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது, 15 வயது சிறுவன் அமித் குமாரின் மனைவியுடன் பழகியுள்ளார்.

இதனால் இருவரும் கள்ள உறவில் ஈடுபட்டதாக அமித்குமாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, தனது நண்பரின் உதவியுடன் சிறுவனை தன்னுடன் அழைத்துச் சென்ற அவர், கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அவர் உடலை களில்பூர் அணை பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். தந்தையும் தனது மகன் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Read More : இனி போக்குவரத்து நெரிசலே இருக்காது..!! 19 நிமிடங்களில் பறந்து போகலாம்..!! டிக்கெட் எவ்வளவு தெரியுமா..?

Tags :
Advertisement