For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"போதை பொருள் கொடுத்து..., கதற கதற.." வீராங்கனை கூட்டு பாலியல் வன்புணர்வு.! 4 பேருக்கு வலைவீச்சு.!

11:59 AM Dec 07, 2023 IST | 1newsnationuser4
 போதை பொருள் கொடுத்து     கதற கதற    வீராங்கனை கூட்டு பாலியல் வன்புணர்வு    4 பேருக்கு வலைவீச்சு
Advertisement

பஞ்சாப் மாநிலத்தில் 15 வயது விளையாட்டு வீராங்கனை போதை பொருள் கொடுக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் நீயும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement

பஞ்சாப் மாநிலம் பெரோசாப்பூர் மாவட்டத்தில் மம்தாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சார்ந்த 15 வயது விளையாட்டு வீராங்கனை அதிகாலையில் ஓட்ட பயிற்சிக்காக சென்று இருக்கிறார். அப்போது அவரை வழிமறித்த அதே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆளில்லாத இடத்திற்கு சிறுமியை கடத்திச் சென்று அவருக்கு வலுக்கட்டாயமாக போதை பொருள் கொடுத்து சிறுமி மயங்கியதும் அவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிறுமியின் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட லவ்பிரீத் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளான பம்மா சிங் ஜஸ்பிரீத் சிங் மற்றும் குர்மித் சிங் ஆகிய நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Tags :
Advertisement