முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"கலிகாலம்.." 15 வயது சிறுவன் 13 வயது சிறுமியை வன்புணர்வு.! வெளியே சொல்ல கூடாதென கொலை மிரட்டல்.!

11:22 AM Jan 30, 2024 IST | 1newsnationuser7
Advertisement

குஜராத்தில் 15 வயது சிறுவன், 13 வயது சிறுமியை வன்புணர்வு செய்துள்ளான். இதைப் பற்றி யாரிடமும் கூறினால், அந்த சிறுமியையும், அவளுடைய சகோதரனையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளான்.

Advertisement

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில், கடந்த ஜனவரி 27ஆம் தேதி, 15 வயது சிறுவன், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்ததாகத் தெரிகிறது.

அந்த சிறுமியின் தாயும், குற்றத்தை புரிந்த அந்த சிறுவனும் ஒன்றாக பணிபுரிந்ததால், இந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது அங்கு வந்துள்ளான். தெரிந்தவர் என்ற முறையில் அந்த சிறுமி அவனை வீட்டுக்குள் அனுமதித்து அருந்துவதற்கு நீரும் கொடுத்துள்ளார். அவன் கதவை தாழிட்டு அந்தப் பெண்ணை பலவந்தமாக வன்புணர்வு செய்துள்ளான். இதைப் பற்றி வெளியில் யாரிடமும் கூறினால் அந்த சிறுமியையும் அவளின் சகோதரனையும் கொன்று விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளான்.

பயத்தில் உறைந்த அந்த சிறுமி சில நாட்கள் தனது தாயிடமும் இதைப் பற்றி தெரிவிக்கவில்லை. மீண்டும் தற்போது தொலைபேசியில் அந்த சிறுமியை தொடர்பு கொண்டு தான் தற்போது வீட்டிற்கு வரப் போவதாகவும் வீட்டில் உள்ள அவளின் சகோதரனை வெளியே அனுப்பவும் கூறி மிரட்டியுள்ளான். இதனைக் கேட்ட அந்த சிறுமி தனது தாய் வீட்டிற்கு வந்தபோது அழுது கொண்டு நடந்தவைகளை கூறியுள்ளார். பதறிப்போன அந்த தாய் உடனே போலீசில் புகார் அளித்துள்ளார்.

லிம்பயாட் காவல்துறையினர், அந்த சிறுவனை ஐபிசி போக்சோ, கற்பழிப்பு மற்றும் கிரிமினல் மிரட்டல் பிரிவுகளின் கீழ் கைது செய்து, இது குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
gujaratminorpocsopolice investigationrapesuratVictim
Advertisement
Next Article