For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Accident: கடந்த 24 மணி நேரத்தில் சாலை விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு..!

07:35 AM Apr 11, 2024 IST | Vignesh
accident  கடந்த 24 மணி நேரத்தில் சாலை விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு
Advertisement

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சாலை விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த கார் விபத்துகளில் இந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

Advertisement

திருப்பூர் காங்கயம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் சித்ரா தம்பதியின் 60-ம் திருமணத்துக்காக குடும்பத்தினருடன் காரில் சென்றனர். மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். காரை மகன் ஓட்டி வந்துள்ளார். வெள்ளக்கோவில் - காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே திருப்பூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், எதிரே வந்த காரும் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிக் கொண்டன. விபத்தில் 3 மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதே போல மதுரை திருமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திய வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ தம்பதிகள் சிவகாசி சென்றுவிட்டு காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மருத்துவ தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement