For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

11:44 AM Jan 19, 2024 IST | 1newsnationuser6
தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை     வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் கனமழை பெய்தது. பிறகு அப்டியே படிப்படியாக சில மாவட்டங்களில் கனமழை குறைந்தது. இந்நிலையில், இன்று தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement