முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடக்கொடுமையே.!! கர்ப்பமான 13 வயது சிறுமி.!? உறவினர்கள் அதிரடி கைது.!!!

03:13 PM Jan 03, 2024 IST | 1newsnationuser7
Advertisement

மும்பை நகரைச் சார்ந்த 13 வயது சிறுமி உறவினர்களால் தொடர் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பமடைந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகாரை பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மும்பை நகரில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

மும்பையின் விக்ரோலி நகரை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது வயிறும் பெரிதாக இருந்திருக்கிறது. இதனை கவனித்து சிறுமியின் பெற்றோர் அவரிடம் இது குறித்து விசாரித்துள்ளனர். சிறுமி பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்காததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர் .

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் கடுமையாக விசாரணை நடத்தியதில் அவர்களது உறவினர்களான 2 இளைஞர்கள் சிறுமியிடம் தொடர்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. மேலும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சிறுமியை தொடர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது மற்றும் 18 வயதுடைய இரண்டு இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
CRIME AGAINST KIDSindiaMumbaiPOCSO Actsexual violence
Advertisement
Next Article