முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கோர விபத்தில் 13 பேர் உயிரிழப்பு!… பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டதில் நிகழ்ந்த சோகம்!

06:30 AM Dec 28, 2023 IST | 1newsnationuser3
Advertisement

மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்தும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தின் குணா-ஆரோன் சாலையில் தனியார் பேருந்து ஒன்று டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் பயணிகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 17 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடத்திற்கு சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தருண் ரதி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் தீயில் அடையாளம் தெரியாத அளவுக்கு சிலரின் உடல்கள் கருகிவிட்டன, அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை நடத்தப்படும் என்று விபத்துக்கான காரணத்தை கண்டறிய விரிவான ஆய்வு நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதலமைச்சர் மோகன் யாதவ், அவர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.4 லட்சம் அறிவித்தார். இதில், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
13 killed13 பேர் உயிரிழப்புAccidentbusmadhya pradeshகோர விபத்துபேருந்து - லாரி மோதி விபத்துமத்திய பிரதேசம்
Advertisement
Next Article